சனி, 14 நவம்பர், 2009

ஈழக் கவிதை

மீண்டும் எழுவோம்
பலம் சில கொண்டு
களம் பல கண்டு
தளம் பல வென்ற -வேங்கைகள் நாளினை
வளம் பல பெற்று
புலம் தனில் வாழும் தமிழர்கள் நாம்- எம்
தலம் தனில் இன்று சுடைதனை ஏற்றி -எம்
குலம் தனைக் காத்த மாவீரரை வணங்கி -சுய
நலம் தனைக் கடந்து பொது நலம்தனைக் கொண்டு
புலம் தனில் உள்ளோர் -மீண்டும்
பலம் தனைப் பெற்ரால் !
இளம் தலை முறையின் இனியவழிகாட்டலில்

இழந்ததைப் பெறலாம் நாம் இழந்ததைப்பெறலாம்
பளம் கதை போதும் -இனி
பளம் கதை போதும்
கலம் கொண்டுதாக்க
களம் இப்போது இல்லை
பலம் கொண்டு தாக்க -போர்க்
களம் கூட இல்லை
வலம் வரும் உலகை
புலன் கொண்டு பார்த்தால்!
பலன் ஒன்று கிடைக்கும்
புலம் தனில் நாங்கள்
பலம் தனைப் பெற்று
நிலம் தனை மீட்போம் -நாம்
இழந்ததை மீட்போம்- தமிழ்!
ஈழத்தை அமைப்போம் !
தமிழ் ஈழத்தை அமைப்போம்!
தமிழரின் தாகம் தமிழீழ்த்தாயகம்



சி. ஜெயக்குமார்