சனி, 14 நவம்பர், 2009

மாவீரர் கவிதை

கார்த்திகைப்பூக்கள்
மாவீரர் என்னும் மணிமகுடம்
தலைவர் வைத்திட்ட திருவுருவம்
காலத்தால் அழியாத காவியங்கள்
அவர் திருவடி ஓவியங்கள்
அடிமைவாழ்வில் மயங்கிய எம்மினம்
விளித்தது இன்று விடுதலைக்காய்

மாந்தரும் அங்கே மயங்கினர்
தமிழ் ஈழமதை நேசித்தே
தோள்களில் திடம் பூண்டனர்
போர்க்களம் பல கண்டு
விடுதலை வேட்கையுடன்
துளிர்விட்டு தளைத்தனர் அன்று

இன்று கல்லறையில் தூங்கவில்லை நீங்கள்
எம் நெஞ்சங்களில் கேட்கும்
இதயத்தின் துடிப்பொலியாய் நடமாடும்
கார்த்திகைப் பூக்களின் மகரந்தம்

ஈழ தேசத்தின் மொட்டுக்கள்
நீங்கள் தூங்கவில்லை இன்று
புலம்பெயர் தேசத்தில் எம்முள்
ஐந்தாம் கட்ட போருக்கு
எம்மை வழிநடத்தும் வழிகாட்டிகள்

ஈழதேசத்தின் விடி வெள்ளியாய்
மலர்ந்திருக்கும் கார்த்திகை பூக்களே
எம் உடலும் உயிரும் உள்ளவரை-மலர்
தூவி தலைசாய்க்கிறோம்
கார்த்திகை இருபத்தேழில்






இணுவையூர்சோதி