
முகவரிகள் தொலைத்து
முடங்கிப்போனது நம் வாழ்வு
பட்டுணரும் வலிகளாலே
பலநாட்கள் கழிய
பட்ட்ட மரமாகிறது நம் வாழ்வு
எம்மை விட்டுச்சென்ற வசந்தம்
இன்னும் எட்டி எட்டிப் போக
ஏதிலியாய் வாடியே
ஏங்குகின்றோம் இங்கேயே
எம் இனிய ஊரைப் பிரிந்து
கூடிக் குலாவிய
உறவுகளைப் பிரிந்து
தவியாய்த் தவித்தேன்
தனி மரமானேன்
தனிமை வாழ்வியலின் வல்லிகளை
கடந்து வந்த நாட்களை
கண்முன்னே கொண்டு வர
எதிர்காலம் கேள்விக்குறியாகி
கரைகிறது யுகமாகிப் பொழுதுகள்
யுத்தத்தில் வென்றுவிட்டோம்
பயங்கரவாதத்தை
முற்றாக ஒழித்துவிட்டோம்
நீ மகிழ்ச்சியில் திளைக்கிறாய்
ஆனாலும் இங்கே
காகிதமாய்க் கிழிவது
நாம் தானே...
எமையெல்லாம் இந்த
திறந்த வெளிச்சிறையில்
அடைத்து வைத்து
என்னதான் செய்யப்
போகின்றாய்?
ஏன் தான் எம்மை
இப்படி வதைக்கிறாய்
கூட்டுக்குள் வாழ்வதற்கு
நாம் மிருகங்கள் அல்ல
கூடிக்குலாவிச் சுதந்திரமாய்
அவையே வாழ்கின்றன
இது உனக்கும் தெரியாதா?
நாமும் உன்னைப் போல்
மனிதர்கள் தான்
எமக்கும் ஆசை உண்டு
எல்லைகள் தாண்டியே
எங்கணும் சென்றிட
விருப்பமும் உண்டு
எம்மை விடு..
எம்மை வாழவிடு...
சுதந்திரக் காற்றை
நாமும் சுவாசிப்போம்
சுற்றியே எங்கணும்
சிறகுகள் விரிப்போம்.
புரட்சிகா
