செவ்வாய், 17 நவம்பர், 2009

தமிழ் ஈழவிடுதலை புலிகள்




மாவீரரான மகளுக்காக ஈழக்கிழவி

அஞ்சாரு நாளுக்குள்ள
ஆனையிரவு வீழ்ந்திடுமாம்
ஆமிக்கார பயலுக
மார்தட்டி சொன்னத்தாக
சின்னமக
கதைக்கயில
கிழவி மனம் பொருக்கலையே

கிளி நொச்சி வந்தாச்சு
பரந்தனும் தான் புடிச்சாச்சு
சிங்க கொடி நட்டாச்சுனு
சிங்களனும் கூத்தடிக்கிறான் அதை
காட்டிக் கொடுக்க பிறந்தவனும்
சேர்ந்து ரசிக்கிறான்

மண் காக்க
எங்கள் குலம் காக்க
மாலதி படை சேர்ந்து போனவளே
பொட்டைக்கு இது தேவையானு
அன்னைக்கு கேக்கையுல
பத்து தடவை பாடை வராதுனு
சொன்னவளே
நேற்றைக்கு தொலைக்காட்சி
பார்க்கையிலே
இடி தான் விழுந்திற்றே
உயிர்ற்ற பினமாய் நீ கிடக்க
உடையெல்லாம் உருகிற்றே
ஒரு விலங்கு
அம்மனமாய் அவன் அம்மா கிடந்தாலும் ரசிப்பவனோ...
இல்லை
அம்மாவையே கலவிக்கு அழைத்த
சிங்கள விசயனின் பேரனோ..
உடையெல்லாம் இழந்தாலும்
ஊர் எல்லை காத்தவளே....
உன்னை பெத்தவ வயிரெரிந்து சொல்லுரேன்
வந்த பகை அத்தனையும்
வேரோடு சாய்த்திட
புலி வீரன் புயலாய் கிளம்பட்டும்
விட்ட இடம் அத்தனையும் கிடைக்கட்டும்
உன்னை தொட்ட பய தீயில் கருகட்டும்

கண்ணகி வம்சம்னு
ஊர் சொன்னது உண்மையுனா
இந்த கிழவி வாக்கு பலிக்கட்டும்
என் பேத்தி வாழ்வாவது
சுதந்திர ஈழத்தில் இருக்கட்டும்...







புகழேந்தி பாவாணன்

மாவீரர் - மணம் வீசும் பூக்கள்!

ஈழம் எங்கள் நாடடா ஈன்ற அன்னை தமிழடா!
நாடு எங்கள் கண்ணடா வீரம் எங்கள் நெஞ்சடா!
மானம் காத்த மறவர் எங்கள் மடிவில் நூறு கதையடா!
வானம் கூட எம்மைக்கண்டு வியந்த காலம் உண்டடா!

கானகமும் எம்மை காத்த கதைகள் உண்டு கேளடா!
எங்கள் மண்ணில் நாங்கள் வாழும் வாழ்வு கண்ட பேரடா!
வாழவேண்டும் ஈழவன் போல் என்று சொன்னதுண்டடா!
எம் இனத்தின் ஆணி வேரை அறுத்து விட எண்ணியே
சிங்களமும் சிந்தை கொண்டு செய்த பாவம் நூறுடா!

பார்த்துப் பார்த்து அன்னை ஈன்ற பிஞ்சுகளை கூடடா
சிங்களம் தன் காலில் இட்டு கசக்குவதும் உண்டடா!
எம்மைக்காக்க அவதரித்த உத்தமன் நம் அண்ணண்டா!
அண்ணண் வழி பாதையிலே அண்ணண் அக்கா பலரடா!

வீரம் என்ற வார்த்தை கூட இவரை கண்ட பின்னடா
வீறு கொண்டு வேங்கையாக வாழ்த்துச் சொன்னதுண்டடா!
மெழுகுவர்த்தி கூட எங்கள் அண்ணண் அக்கா முன்னிலே
நெஞ்சுருகி தலை சாய்த்து நன்றி கூறும் கேளடா!

இவர்தனை போல் பாரதநில் தியாகி உண்டோ சொல்லடா!
இவரைக் கொண்ட எமது மண்ணை நாம் இழக்கலாகுமோ?
இவரைக் கொன்ற அரக்கர்தனை நாம் மறக்கக் கூடுமோ?
இறக்கவில்லை நீங்கள் எங்கள் உயிர்கள் அண்ணண் அக்காவே!

புதைய வில்லை நீங்கள் மண்ணில் விதைக்கப்பட்ட விதைகளே!
மலரும் வரை ஈழம் எங்கள் பாதை உங்கள் பாதையே!
மலர்ந்த பின்னும் மனதில் நீங்கள் மணம் வீசும் பூக்களே!
எங்கள் மனம் தேடும் பூக்களே! வீர உரம் போடும் நூல்களே!
வாழ்க தமிழ்! மலர்க தமிழ் ஈழம்!





&nbs