வெள்ளி, 20 நவம்பர், 2009

மாவீரர் நாள் 27




ஒரு நாள் விடியும் விடியும்

ஒரு நாள் விடியும் விடியும்
எங்கள் துயரங்கள் உன்னால் மடியும்
சத்தியம் வெல்லுமே தம்பி
லட்ச்சிய நிலை நில்லடா நம்பி

தத்துவம் பேசியே தருக்கர் எழுகிறார்
உத்தமர் என்றே ஊருக்குள் வருகிறார்
வாக்கு போடாதே தம்பி
இந்த ஈனப் பிறவிகளை நம்பி
ஈழப் போரையே இழிவு செய்தவர்

காட்டிக் கொடுத்தே காலடி கிடந்தவர்
நாட்டை அழித்தே
நா, நிலை போற்றுவார்
கூட்டிக் கொடுத்தே
உன்னை கூண்டில் இடுவார்

யுத்தம் சூழ்ந்து நித்தம் அழிந்தோம்
ரெத்த ஆற்றிலே நாளும் மிதந்ததோம்
எத்தர் எய்த கணைகளினாலே
ஏதிலியாகவே எங்கும் அலைந்தோம்

மூச்சுக் காத்திலே நஞ்சயும் கலந்து
எச்சங்களாகவே எம்மினம் எரித்தவர்
வித்தகராகவே வீதி வருகிறார்
வீழ்ந்து விடாதே தம்பி

உன்னை காக்க நீயே எழுந்திடு
உன் நாட்டையும் காக்கனும்
புலியாய் புறப்படு
தமிழா தமிழா தன்மானத் தமிழா
உன்னால் முடியும் உன் வேதம் புதிது
நாளை நமதல்ல இன்றே எழுது.

வல்வை சுஜேன்.

சமர்க்களங்களின் சரித்திர நாயகர்கள்



தாய் மண்ணின் விடுதலைக்காக
முழுமையாக ஒப்படைத்தவர்கள் !
தமிழீழத் தேசியத் தலைவரின்
போரியல் சிந்தனைக்கு வடிவம் கொடுத்தவர்கள் !

தமிழ் மக்களின் மனங்களில் இருந்தும்
வரலாற்றில் இருந்தும் மறக்க முடியாதவர்கள்.
தமிழர்களின் வரலாறு வீரம் செறிந்தாக
புதிதாக எழுத புறப்பட்ட நாயகர்கள் !

தமிழீழ விடுதலைப் போராட்டங்களின்

சமர் ஆய்வுகளுக்குப் பொறுப்பாளர்கள் !

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்

பலமுள்ளவன் வாழ்வான் என்ற யதார்த்தில்

ஈழ விடுதலைக்கான விடுதலைப் போராட்டத்திற்காக

புறப்பட்ட ஈழத்தின் மைந்தர்கள் !

விடுதலைப் போராடட்த்தில்

களத்திலும் சூழலுக்கும் தம்மை ஈந்தவர்கள் !

பேரழிவுகளையும் அவநம்பிக்கைகளுமாய்

சிதைந்து கிடக்கும் தமிழத்தின் விடுதலைச் கூடர்கள் !

கற்பனைக்கு எட்டாத சிந்திக்க முடியாத

கொடூம் கண்டு விழி சிவந்த வீரர்கள் !

தமிழ் மக்களை ஒன்றினைத்த

ஒரு பெரும் சத்திகள் !


மாவீரர்களை நாம் புதைக்கவில்லை ! விதைத்திருக்கிறோம் !

எமது ஈழ மண்ணில்


எமது நாட்டில் இனக்குரோதம் விஸ்வரூபம் எடுத்துள்ளது


" இறுதிப் போரிதி உரிமைப் போரிரிது "

" அறுதியிட்டு கூறுவோம் சர்வதேசமே "

" தமிழரின் தாகம் தமழீழத் தாயகம் "


சிறி நவரத்தினம் (சுவிஸ்)