வெள்ளி, 20 நவம்பர், 2009

சமர்க்களங்களின் சரித்திர நாயகர்கள்



தாய் மண்ணின் விடுதலைக்காக
முழுமையாக ஒப்படைத்தவர்கள் !
தமிழீழத் தேசியத் தலைவரின்
போரியல் சிந்தனைக்கு வடிவம் கொடுத்தவர்கள் !

தமிழ் மக்களின் மனங்களில் இருந்தும்
வரலாற்றில் இருந்தும் மறக்க முடியாதவர்கள்.
தமிழர்களின் வரலாறு வீரம் செறிந்தாக
புதிதாக எழுத புறப்பட்ட நாயகர்கள் !

தமிழீழ விடுதலைப் போராட்டங்களின்

சமர் ஆய்வுகளுக்குப் பொறுப்பாளர்கள் !

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்

பலமுள்ளவன் வாழ்வான் என்ற யதார்த்தில்

ஈழ விடுதலைக்கான விடுதலைப் போராட்டத்திற்காக

புறப்பட்ட ஈழத்தின் மைந்தர்கள் !

விடுதலைப் போராடட்த்தில்

களத்திலும் சூழலுக்கும் தம்மை ஈந்தவர்கள் !

பேரழிவுகளையும் அவநம்பிக்கைகளுமாய்

சிதைந்து கிடக்கும் தமிழத்தின் விடுதலைச் கூடர்கள் !

கற்பனைக்கு எட்டாத சிந்திக்க முடியாத

கொடூம் கண்டு விழி சிவந்த வீரர்கள் !

தமிழ் மக்களை ஒன்றினைத்த

ஒரு பெரும் சத்திகள் !


மாவீரர்களை நாம் புதைக்கவில்லை ! விதைத்திருக்கிறோம் !

எமது ஈழ மண்ணில்


எமது நாட்டில் இனக்குரோதம் விஸ்வரூபம் எடுத்துள்ளது


" இறுதிப் போரிதி உரிமைப் போரிரிது "

" அறுதியிட்டு கூறுவோம் சர்வதேசமே "

" தமிழரின் தாகம் தமழீழத் தாயகம் "


சிறி நவரத்தினம் (சுவிஸ்)